Friday, September 19, 2014

கவிஞர் வைரமுத்து பாடல்கள்

பாடல்: வெண்ணிலா வெண்ணிலா

படம்: இருவர்



வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்

கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்

தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்

எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்

நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்

ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்

கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்

வேரோடு துடிக்க யாரோடு உரைக்க

கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: வீரப்பாண்டி கோட்டையிலே

படம்: திருடா திருடா



வீரப்பாண்டி கோட்டையிலே

மின்னலிக்கும் வேளையிலே

ஊரும் ஆறும் தூங்கும் போது

பூவும் நிலவும் சாயும் போது

கொலுசு சத்தம் மனச திருடியதே

(வீரப்பாண்டி..)



வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு

தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு

பவலங்கள் தாரே பால் போல பல்லுக்கு

முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபச்சொல்லுக்கு

உன் ஆசை எல்லாம் வெறும் காணல் நீரு

நீயெல்லாம் போடா வேரல்ல பாரு

நீ சொல்லும் சொல்லுக்குள்ளே எம் பொழப்பு வாழும் புள்ள

நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: உன்னை நினைக்கவே

படம்: ஜேஜே



உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே (உன்னை நினைக்கவே)

நீ கேட்கையில் சொல்லவே இல்லையே

நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே

என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே (உன்னை நினைக்கவே)



லல்லால்லா லால்லா

ஜேஜேஜே ஜேஜேஜே



நான் உன்னை மறந்த செய்தி

மறந்துவிட்டேன்

ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்

கண்மூடி சாயும் பொழுதிலும்-உன் கண்கள்

கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன்

நீ என்னைக்கேட்டபோது காதலில்லை

நான் காதல் உற்ற போது நீயுமில்லை

ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்

இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா

ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே

உன் காதிலே

என்று கேட்கும் இந்த சத்தம் (உன்னை நினைக்கவே)



என் சாலை எங்கும் எங்கும்

ஆண்கள் கூட்டம்

என் கண்கள் சாய்ந்ததுண்டு தில்லை

காட்சி யாவும் புதைந்து போனது

என் நெஞ்சம்

உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்

ஓ ஓஒ

உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்

என்னோடு எட்டி நின்ற நாகரீகம்

கண்ணில் கண்ணில் வந்து போகுதே

என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே

உன் தேடலோ காதல் தேடல் தான்

என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல (உன்னை நினைக்கவே)



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது

படம்: பயணங்கள் முடிவதில்லை



தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ



தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ



கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்

இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்

கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்

இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா

அன்னமும் இவளிடம் நடை பழகும்

இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்



தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ



பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்

புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்

ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்

அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

அருவிகளோ ராகம் தரும்

அதில் நனைந்தால் தாகம் வரும்

தேவதை விழியிலே அமுத அலை

கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை



தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: தொட தொட மலர்ந்ததென்ன

படம்: இந்திரா



தொட தொட மலர்ந்ததென்ன

பூவே தொட்டவனை மறந்ததென்ன?

(தொட தொட)

பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?

மழை வர பூமி மறுப்பதென்ன?

(பார்வைகள்)

(தொட தொட)

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்

காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்?

நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில்ல்

மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?

காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

(தொட தொட)

பனிதனில் குளித்த பால்மலர் காண

இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம் பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்

இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே

மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே

(தொட தொட)



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: திருமண மலர்கள் தருவாயா

படம்: பூவெல்லாம் கேட்டு பார்



திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!



மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே

நானும் அவனும் அருகே



பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை



திருமண மலர்கள் தருவாயா

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே

தினம் ஒரு கனியே தருவாயா

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே



தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும்போது

கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு

மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை

சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு



அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை

அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை

போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு

புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை

ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை



இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா

வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா



திருமண மலர்கள் தருவாயா

தினம் ஒரு கனியே தருவாயா

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே



கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா

என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு

மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள

அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு

பாவாடை அவிழும் வயதில்கைறு கட்டிவிட்டவன்

எவனோதாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்

கொழுசுயிடும் ஓசை கேட்டே -

மனசில் உள்ள பாஷை சொல்வாய்!

மழை நின்ற மலரை போல பதமானவன்

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்



தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே

தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே



திருமண மலர்கள் தருவாயா?

தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!

தினம் ஒரு கனியே தருவாயா?

வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!



மலர்வாய் மலர்வாய் கொடியே!

கனிவாய் கனிவாய் மரமே!

நதியும் கரையும் அருகே!

நானும் அவனும் அருகே!



பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை

ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

 



Title:கவிஞர் வைரமுத்து பாடல்கள் 



பாடல்: தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

படம்: டூயட்



ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அன்னை

தூய உருப்பளிங்கு போல் வழ என்

உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு

வாராது இடர்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமல் பூந்தாமரை போற்கையும்

துடி இடையும்

அல்லும் பகலும் அனவரதம்

துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி



தானனா தானனன தன்னன்னானா

தான தான நானா தான நானா தன்னன்னானா



தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு

சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு

எத்தனை சபைகள் கண்டோம்

எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்

அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு



மெட்டுப்போடு மெட்டுப்போடு என்

தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு

அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு



தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு

சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை

எத்தனை தடையும் கண்டோம்

அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு



மெட்டுப்போடு மெட்டுப்போடு என்

தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு

அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு



இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு

இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு

கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு

சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு



நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு

கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு

தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு

தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு



மெட்டுப்போடு மெட்டுப்போடு என்

தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு

அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு



இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க

எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க



நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க

நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க

நம் பூமி மேலே புது பார்வை கொள்க

நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க

கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க



பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்

தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு

அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு



தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு

சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு

எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்

அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு



மெட்டுப்போடு மெட்டுப்போடு என்

தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு

அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு



ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச

சக ரிக மநி பம கமப

பச நித மப

சம கரி நிச

கம பம ப

நி ச க ரி ச

ச ரி த ப

க ரி நி ச

ம ப நி

க ரி ச

ப நி க ம

ப ம க ரி ச நி த ப

ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச

க ரி ச நி ச நி த ப

ப ச நி த ப க க ரி

க ரி க ப ம த ப ச

க ரி ச நி த ரி ச நி த ப

க ரி க ம

ப த ம ச ச

ப த ம க க க

ச ம க ரி ரி

ச நி த ப ப ப

ச க ரி ச

க ரி நி ச ச ச

ம க ரி

ப நி ச நி ப

க ரி க ம ப



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: செல்லகிளியொ

படம்: செல்லமே



நிச ச ச ச ......



செல்லகிலியோ செல்லகிளியொ புதருக்குள்ளே

வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே

என்னை என்னை மீட்டு போட இரவுக்குள்ளே

ஏய் ஒத்தை கிளியே , என் மெத்தை கிளியே

நீ தூக்கம் கேட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே

ஏய் ஒத்தை கிளியே , என் மெத்தை கிளியே

அடி பூமி பந்தில் துளைகள் போட்டு

விடியும் முன்னே கூட்டி செல்வேன்



(செல்லகிளியொ .....)



திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்

விட்ட இடத்தில முத்தம் மீண்டும் தொடர செய்வாய்

மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்

நம்ம கட்டில் சூடு இப்போ ஆரி போச்சு

நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா

என் சோகம் போக என் மோகம் தீர

அட ரெட்டை சேவை செய்ய போக்ஹும் கெட்டிக்கார கிட்ட வா வா



(செல்லகிளியொ ....)



மனசுன மச்சி , டுநியகே சசி

மனசுல வச்சி மருகுது பட்சி



ஒட்டி கொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்

உடை இல்லாத இரவை போல பகலை செய்வோம்

ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்

இனி ஒவ்வொரு இரவு முதல் இரவாய் செய்வோம்

அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்

இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்

நாம் தழுவும் போது சிதறும் துளியில்

விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்



(செல்லகிளியொ ...)



மேலும் படிக்க

Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: கும்மியடி

படம்: செல்லமே



தந்தன நா ... தான தந்தன நா ....



கும்மியடி பெண்ணே கும்மியடி

கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது

குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி

வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது

வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி



எங்க வீட்டு தங்க விளக்கு

ஏங்கி நிக்குது கும்மியடி

என்னை ஊற்றி திரிய தூண்ட

ஆளு வந்தது கும்மியடி



(கும்மியடி ...)



அடி செக்க செவந்த அழகா

கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர

பத்து வருஷம் பக்கம் இருந்தும்

பார்கவில்லடி நானும்

அந்த ராஜ கதவு திறந்த

பல ரகசியமும் தெரிஞ்ச

பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்

பைத்தியம் ஆகா வேணும்

அடி தூக்கி இருக்கும் அழகு

அவன் தூக்கம் கெடுத்து போகும்

அடி பாக்கி இருக்கும் அழகு

உசிர் பாதி வாங்கி போக்ஹும்

தான தனதான தந்தானே ...



அடி பஞ்சு மேதையில - ஒரு பந்தயம் நடக்குமே

அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜெயகுமே



(கும்மியடி ...)



ஒரு போன்னுக்குள்ளது செருக்கு

அடி ஆணுக்குள்ளது முறுக்கு

அடி விடிய விடிய நடந்த கதைய

விளக்க போகுது விளக்கு

இவ உலகம் மறந்து கிடப்ப

அடி உறவு மட்டுமே நினைப்ப

உடுத்தி போன சேலை மறந்து

வெடி உடுத்தி நடப்ப

அடி மோகம் உள்ள புருஷன்

பல முத்தம் சொல்லி கொடுப்பான்

இன்னும் போக போக பாரு

இவ ஒத்தி சொல்லி கொடுப்ப

தான தனதான தந்தானே ...



அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும்

அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்



(கும்மியடி ...)



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: காதலிக்கும் ஆசை

படம்: செல்லமே



ஓஅஹ் என் சோனாலி சோ சோ சோனாலி

ஹொஅ மி சோனாலி சோ சோ சோனாலி



காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான் உன்னை நான் முன்னாள்

என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி திதிதாய்



(காதலிக்கும் ....)



சந்திர சூரியர் எழுகையிலே

உன் முக ஜாடைகள் தெரிகிறதே

பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே

சரிகிறதே ........ விரிகிறதே ........

அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ



நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ

ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)



(காதலிக்கும் ...)



என் காதலி காதலி காதலி காதலி ....

என்னை காதலி காதலி காதலி ......



உன் முகம் கொண்ட பருவினிலும்

வின் மீன் ஒலிகள் வீசுதடி

கோபம் வழியும் வேளையிலும்

இதயம் கண்ணில் மின்னுதடி

மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............

எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்

அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்

உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே



காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்

ஏமாந்த பெண்ணை தேடி போயா

உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல

முள்ளோடு தேனும் இல்லை போயா

ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை

உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை

நீ கல்லை தந்து கனியோ என்று

காதல் செய்வது வீண் வேலை



என் காதலி காதலி காதலி காதலி ....

என்னை காதலி காதலி காதலி ......



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: தாய் தின்ற மண்ணே

படம்: ஆயிரத்தில் ஒருவன்



தாய் தின்ற மண்ணே

இது பிள்ளையின் கதறல்

ஒரு பேரரசன் புலம்பல்



தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே

பிள்ளையின் கதறல்

பிள்ளையின் கதறல்

ஒரு பேரரசன் புலம்பல்

ஒரு பேரரசன் புலம்பல்



நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே



கயல் விளையாடும் வயல் வெளி தேடி

காய்ந்து கழிந்தன கண்கள்

காவிரி மலரின் கடிமணம் தேடி

கருகி முடிந்தது நாசி

சிலை வடி மேவும் உளி ஒலி தேடி

திருகி விழுந்தன செவிகள்

ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி

ஒட்டி உலர்ந்தது நாவும்



புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்

எலிக் கறி பொறிப்பதுவோ

காற்றை குடிக்கும் தாவரமாகி

காலம் கழிப்பதுவோ

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை

மன்னன் ஆளுவதோ

மன்னன் ஆளுவதோ...



தாய் தின்ற மண்ணே

தாய் தின்ற மண்ணே



நொறுங்கும் உடல்கள்

பிதுங்கும் உயிர்கள்

அழுகும் நாடு

அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ

தூதோ முன் வினை தீதோ

களங்களும் அதிர களிறுகள் பிளிற

சோழம் அழைத்து போவாயோ

தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்

புரவிகள் போலே புரண்டிருப்போம்

ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை

அருவிகள் போலே அழுதிருப்போம்

அதுவரை அதுவரை...



தமிழர் காணும் துயரம் கண்டு

தலையை சுற்றும் கோளே.. அழாதே

என்றோ ஒரு நாள் விடியும் என்றே

இரவை சுமக்கும் நாளே.. அழாதே

நூற்றாண்டுகளின் துருவை தாங்கி

உறையில் தூங்கும் வாளே.. அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ

என்னோடழும் யாழே.. அழாதே



நெல்லாடிய நிலமெங்கே

சொல்லாடிய அவையெங்கே

வில்லாடிய களமெங்கே

கல்லாடிய சிலையெங்கே

தாய் தின்ற மண்ணே

இது பிள்ளையின் கதறல்

ஒரு பேரரசன் புலம்பல்



Title: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: வாழும் வரை போராடு

படம்: பாடும் வானம்பாடி



வாழும் வரை போராடு

வழி உண்டு என்றே பாடு

இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே

மழை என்றும் நம் காட்டிலே ஓ..

(வாழும்..)



மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு

சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு

ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே

(வாழும்..)



ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்

வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்

எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே

(வாழும்..)



கவிஞர் வைரமுத்து பாடல்கள் 



பாடல்: மல்லிகையே மல்லிகையே

படம்: நினைத்தேன் வந்தாய்



மல்லிகையே மல்லிகையே மாலையிடும்

மன்னவன் யார் சொல்லு சொல்லு

தாமரையே தாமரையே காதலிக்கும்

காதலன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனா

குறும்புகளின் மன்னனா

மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா

அவன் முகவரி சொல்லடி

(மல்லிகையே..)



கண்கள் மட்டும் பேசுமா

கைகள் கூட பேசுமா

உன் காதல் கதை என்னம்மா

உன்னைப் பார்த்த மாமனின்

கண்கள் என்ன சொல்லுதோ

மாறைக்காமல் அதைச் சொல்லம்மா

பக்கம் வந்தானா முத்தம் தந்தானா

காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா

அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்

மாறும் அழகே சரிதான்

இது காதலின் அறிகுறிதான்



தாமரையே தாமரையே காதலிக்கும்

காதலன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனா

குறும்புகளின் மன்னனா

மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா

அவன் முகவரி சொல்லடி



மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி

புது வெட்கம் கூடாதடி

காதல் பேசும் பூங்கிலி

உந்தன் ஆளைச் சொல்லடி

நீ மட்டும் நழுவாதடி

அவன் முகம் பார்த்தால்

அதே பசி போக்கும்

அவன் நிறம் பார்த்தால்

நெஞ்சில் பூப்பூக்கும்

உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்

வெட்கம் பார்த்தே அறிவேன்

சொல்லு உன் காதலன் யார் அம்மா

(மல்லிகையே..)



Title: : கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: தாஜ்மஹால் தேவை இல்லை

படம்: அமராவதி



தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே

காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே

இந்த பந்தம் இன்று வந்ததோ

ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ

உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ

(தாஜ்மஹால்..)



பூலோகம் என்பது பொடியாகி போகலாம்

பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்

ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்

ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே

கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே

நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே

(தாஜ்மஹால்..)



சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது

சில் வண்டுகள் காதல் பண்ணால் செடி என்ன கேள்வி கேட்குமா

வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே

ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா

வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே

வாழாத பேருக்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

(தாஜ்மஹால்..)



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: சுடும் நிலவு சுடாத சூரியன்

படம்: தம்பி



அ அ ஆ அ அ ஆஆஆ

அ அ ஆ அ அ ஆ



சுடும் நிலவு சுடாத சூரியன்

ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)

காதலித்துப் பார்... காதலித்துப் பார்..



இமையடித்தாலும் இதயம் வலிக்கும்

வலிகளில் கூட வாசனை இருக்கும்

காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..

நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்

நதியிருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கணிதமாகும்

தவறு எல்லாம் புனிதமாகும்

பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்

எச்சில் பண்டம் அமிர்தமாகும்

நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்



சுடும் நிலவு சுடாத சூரியன்.



மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்

சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்

காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..

சத்தியக் காதல் என்னமும் செய்யும்

சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோட்சமாகும்

மற்ற பாகம் காய்ச்சலாகும்

தெய்வம் தூங்கி மிருகமாகும்

மிருகம் தூங்கி தெய்வமாகும்

தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்



சுடும் நிலவு சுடாத சூரிய



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: ஒரு புன்னகை பூவே

படம்: 12 பி



ஒரு புன்னகை பூவே

சிறு பூக்களின் தீவே



எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது

என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது

லவ் பண்ணு லவ் பண்ணு



ஒரு புன்னகை பூவே

சிறு பூக்களின் தீவே

நீ என்னை மட்டும் காதல் பண்ணு

என் வாலிப நெஞ்சம்

உன் காலடி கெஞ்சும்

சிறு காதல் பிச்சை போடு கண்ணு



நான் கெஞ்சி கேட்கும் நேரம்

உன் நெஞ்சின் ஓரம் ஈரம்

அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ

சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்

ஓடாதம்மா வீழாதம்மா

சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்

சூதாதம்மா ரீலுதாம்மா



உன் படுக்கை அறையிலே

ஒரு வசந்தம் வேண்டுமா

உன் குளியல் அறையிலே

விண்டர் சீசன் வேண்டுமா

நீ மாற சொன்னதும்

நான்கு சீசனும் மாற வேண்டுமா

லவ் பண்ணு

என்பது ஆண்டுகள் இளமையும் வேண்டுமா

மெய்யாகுமா மெய்யாகுமா



அட வெள்ளை வெள்ளையாய்

ஓர் இரவு வேண்டுமா

புது வெளிச்சம் போடவே

இரு நிலவு வேண்டுமா

உன்னை காலை மாலையும்

சுற்றி வருவது காதல் செய்யவே

லவ் பண்ணு ஐயோ பண்ணு



நீ கெஞ்சி கேட்கும் நேரம்

என் நெஞ்சின் ஓரம் ஈரம்

அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: சில்வர் நிலவே

படம்: லவ்லி



சில்வர் நிலவே

அழகிய சில்வர் நிலவே

உந்தன் பெயரை

தேசிய கீதமாய் பாடுவேன்

(சில்வர்..)



ஷேக்ஸ்பியரின் புத்தகத்தை

செந்தமிழில் சொன்னால்

அது நீ நிவேதா

ஐம்பதடி தாஜ் மஹாலை

ஐந்தடியில் செய்தால்

அது நீ நிவேதா

அட தங்கத்திலே

ஆப்பிள் செய்து

அங்கத்திலே ஒட்ட வைத்தால்

நீ நிவேதா

அந்த சூரியனை

ஃப்ரிட்ஜு குள்ளே

வைத்திருந்து கொண்டுவந்தால்

நீ நிவேதா



ஒரு கிலோ ரோஜா

உன் கன்னம் ஆச்சா

அதிலே உம்மா தரலாமா

(சில்வர்..)



மூலிகை பெற்றோல்

அது மெய்யோ பொய்யோ

டைனாசர் வாழ்ந்ததென்பது

மெய்யோ பொய்யோ

நான் உன்மேல் நெஞ்சுக்குள்ளே

கொண்ட காதல்தான்

அது மெய்யடா

அது மெய்யடா



செவ்வாயில் தண்ணீர் உண்டு

மெய்யோ பொய்யோ

இன்னொரு பூமி உண்டு

மெய்யோ பொய்யோ

நான் உன்னை காதலிக்கும்

காதல் மட்டும்தான்

அது மெய்யடி

முழு மெய்யடி



பைனாப்பிள் மரத்தில்தான்

அதில் வேர்கள் கூட

உன்னை போல இனித்திடுமே



சீனாவின் கண்ணாடி

அது உடைந்திடாது

உன்னை போல வளர்ந்திடுமே



நம் கை திரி அளவுதான்

நம் இதயம் உள்ளது

அதில் கடலின் அளவுதான்

இந்த காதல் உள்ளது



அச்சச்சோ அச்ச்சச்சோ கிஸ் மீ டா

அச்சச்சோ அச்சச்சோ கிஸ் மீ டா



வானவில் வண்ணம் எத்தனை

மறந்தே போனேன்

வங்க கடல் எங்கிருக்கு

மறந்தே போனேன்

உன் பெயர் உன் முகம்

உன்னை தவிர

வேரெதுவுமே நினைவில்லையே



நெற்றி பொட்டை எங்கே வைப்பது

மறந்தே போனேன்

காலுக்கு கொலுசா வளையா

மறந்தே போனேன்

உன் விழி உன் குரல்

உன்னை தவிர

அட என்னையே நினைவில்லையே



அந்த ஆகஸ்ட் 15

அன்று என்ன என்று

நினைவில் இல்லை

உன்னாலே



என் பெற்றோரின் பெயர்கூட

இன்று நினைவில் இல்லை

நினைவில் இல்லை

உன்னாலே



அட நிலவின் நிறம் என்ன

அதை மறந்தேண்

நீ சொல்லு



அது சிவப்பென்று நினைக்கிறேன்

இது சரியா

பதில் சொல்லு



நீ சொன்னால் நீ சொன்னால்

நிவேதா

சரிதான் சரிதான்

நிவேதா

(சில்வர்..)



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: சந்தோஷம் சந்தோஷம்

படம்: யூத்



சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி

குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி

விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி

தவறுகள் பண்ணிப் பண்ணித்

திருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி

தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல

பாடம் படி பவழக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்

குப்பைத் தொட்டியில்லை

உள்ளம் என்பது பூந்தொட்டியானால்

நாளை துன்பமில்லை

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

ஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே

அவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே

ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்

மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது

நம்முடைய பிழையில்லையே

துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்

துணிந்தபின் பயமில்லையே

கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்

காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்

 



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 


பாடல்: சந்தியா சந்தியா

படம்: நினைவிருக்கும் வரை



சந்தியா சந்தியா

சம்மதம் சொல்வாயா

சந்தியா சந்தியா

சஞ்சலம் கொல்வாயா

நென் நெஞ்சின் ஆசை சொல்லவா

நெஞ்சோடு மூடி கொள்ளவா

(சந்தியா..)



கங்கையா நீ காணலா

இது காதலா வெறும் வேஷமா

வேர்களா நீ பூக்களா

என் வெண்ணிலா பதில் பேசுமா

சொல்லாத சொல்லுக்கு

பொருள் ஒன்றுக்கு கிடையாது

நான் கொண்ட நேசத்தின்

திறன் என்ன தெரியாது

(சந்தியா..)



காதலே என் காதலே

ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்

மேகமாய் நான் வாழ்ந்தவன்

தனி தீவிலே என்னை பூட்டினாய்

விடிகாலை நேரத்தில்

குயிலுக்கு உற்சாகம்

எதிர் கூவல் கேளாமல்

என் நெஞ்சில் ஒரு சோகம்..

(சந்தியா..)



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 

பாடல்: புது வெள்ளை மழை

படம்: ரோஜா



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது



நதி நீர் நீயானால் கரை நானே

சிறு பறவை நீயானால உன் வானம் நானே



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது



பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது



நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ



புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதி நீர் நீயானால் கரை நானே

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே



புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது



புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்ற



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ளவா


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


விழித்து கொண்டேதான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்டபோதே
முழுசாய தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்ட கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கின்றதா


படம்: மஜ்னு (2001)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சந்தியா
வரிகள் : வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்


இசை:தேவா
பாடியவர்:ஹரிஹரன்
திரைப்படம்:முகவரி
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லா




படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வரிகள்: வைரமுத்து
பாடியவர் : ஜானகி



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா

துள்துள்துள் துள்துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென ஓடு நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா


படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்: சித்ரா / உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நெஹமெ

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள ஞாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுடன் சேர்வதில்லை

இதய கூட்டை பூட்டிக் கொண்டு
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

ம்ம்ம் ......


படம்: ஆனந்த தாண்டவம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ
முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக
கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மறுநாளு மாறிவிடும்
நான் பொம்பள கிறுக்குல வல்லன்
என் புத்தியில் வேறொண்ணும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்
கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்
நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு
எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு
நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
போடி வெள்ளச்சி


படம்: தென்மேற்குப் பருவக்காற்று
இசை: NR ரகுநந்தன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ்,ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே
என்னை முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதருக்குள் இடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?
கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா
ஓணான் கரட்டில கூழ் குடிப்பா
ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா
வேலி முள்ளில் அவ விறகெடுப்பா
நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா
பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா
கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா
மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை
தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை
தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..
ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு
கோயில்லா ஊரில் தாய் இருக்கு
தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குதே அட
தாய் இரண்டு தாய் இருக்குதா


படம்: தென்மேற்கு பருவக்காற்று
இசை: NR ரஹ்நந்தன்
பாடியவர்: விஜய் பிரகாஷ்
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்பதித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே..


படம்: சிந்து பைரவி
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
(கண்ணின்..)

சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
(கண்ணின்..)

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்ந்தப்படி
கலங்குது மயங்குது பருவக்கொடி
(கண்ணின்..)


படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து



Title: Re: கவிஞர் வைரமுத்து பாடல்கள் 




சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ
(சங்கத்..)

மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
(சங்கத்..)

பூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியோட
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியாடாதோ
காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்
(சங்கத்..)


படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா,
வரிகள்: வைரமுத்து

No comments:

Post a Comment

தோழிமார் கதை



ஆத்தோரம் பூத்தமரம்
ஆனை அடங்கும்மரம்
கெளையெல்லாம் கூடுகட்டிக்
கிளியடையும் புங்கமரம்

புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுருதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்காத்தா கட்டிவிட

பட்டுச் சிறுகயிறு
பட்ட எடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில்நீ
எண்ணெய்வச்ச நெனவிருக்கா?

மருதாணி வச்சவெரல்
மடங்காம நானிருக்க
நாசமாப் போன
நடுமுதுகு தானரிக்க
சுருக்காநீ ஓடிவந்து
சொறிஞ்சகதை நெனவிருக்கா?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டுக் காசெடுத்து
கோனார் கடை தேடிக்
குச்சிஐசு ஒண்ணுவாங்கி
நான்திங்க நீகுடுக்க
நீதிங்க நான்குடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி
கலர்க்கலராக் கண்ணீர்விட
பல்லால் கடிச்சுப்
பங்குபோட்ட வேளையில
வீதி மண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்திருச்சே நெனவிருக்கா?

வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நெலவடிக்க
வெள்ளித் துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க
கண்ணாமூச்சி ஆடையிலே
கால்கொலுசு நீ தொலைக்க
சூடுவப்பா கெழவின்னு
சொல்லிச்சொல்லி நீ அழுக
எங்காலுக் கொலுசு
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா?
. . .




பல்லாங்குழி ஆடையில
பருவம் திறந்துவிட
ஈரப் பசை கண்டு
என்னமோ ஏதோன்னு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நான் கத்த,
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடு சேர்த்த நெனவிருக்கா

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருசன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழச்
சம்மதித்தோம் நெனவிருக்கா?

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஒடானோம்
இருவது வயசோட
இருவேறு தெசையானோம்

தண்ணியில்லாக் காட்டுக்குத்
தாலி கட்டி நீ போக
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நான்போக
ஒம்புள்ள ஒம்புருசன்
ஒம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட

நாளும் கடந்திருச்சு
நரைகூட விழுந்திருச்சு
வயித்தில் வளந்தகொடி
வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம்
ஆனைகட்டும் புங்கமரம்


போன வெருசத்துப்
புயல்காத்தில் சாஞ்சிருச்சு...


-வைரமுத்து




தமிழின் வளர்ச்சி

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இன்று நாம் பேசும் தமிழ்மொழி பல கால கட்டங்களில் பல மொழிகளோடு இணைந்து பல உருக்கள் மாறி இறுதி நிலையில் காண்கிறோம். ஆனால் தொல்கால இந்திய எழுத்து முறையை ஆராய்ச்சியாளர்கள் தமிழெழுத்து முறை மற்ற இந்திய எழுத்து முறைகளைக்குத் தாய் பெருங்குரல் கொடுக்கிறார்கள் அறிஞர்கள் பூலரும், ஐராவதம் மகாதேவன் அவர்களும்.

தமிழ் வட்டெழுத்து


தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறையே! வளைந்த கோடுகள் அவ்வெழுத்து முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.

வட்டெழுத்தின் தோற்றம்



வட்டெழுத்துக்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள். நடுகற்கள், நடப்பட்ட கற்களைத் தான் நடுகற்கள் என்று வரலாற்று மேதைகள் கூறுகின்றனர். அதன் வாயிலாகத் தமிழ் வட்டெழுத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. தமிழ் பிராமியில் புழக்கத்திலிருந்த “தமிழ்” எழுத்துக்கள் தான் தமிழ் வட்டெழுத்தாக மாறி வளரத் தொடங்கியது என வரலாறு ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழுத்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கியது. பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய வட்டெழுத்துக்கள் நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்றது எனலாம்.

அன்று செந்தமிழ் நாடு எனப் போற்றப்பட்ட பாண்டிய நாடு “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டி நாடு” என மாணிக்கவாசகரால் பாராட்டப்பட்டது. தமிழை வளர்த்த பாண்டியர்கள் வட்டெழுத்து முறைக்கு ஊக்கம் காட்டினர். கொடுந்தமிழை மேற்கொண்ட சேரர்களும் வட்டெழுத்தில் ஆர்வம் காட்டினர். இரு நாட்டிலும் வட்டெழுத்தில் அரசுச் சாசனங்கள் எழுதப்பட்டன என்றால் அதன் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளுங்கள்.

வட்டெழுத்துப் பகுதிகள்


தமிழ் வட்டெழுத்து தமிழகம் முழுவதிலும் பரவிச் செயல்முறையில் இருந்தது. தமிழகப் பகுதிகளாகிய மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், கோவை, சேலம், வடாற்காடு, தென் ஆற்காடு, செங்கற்பட்டு போன்ற பகுதிகளிலும் பரவியிருந்தது. கொங்கு நாட்டு மன்னர்களின் சாசனங்களிலும் தமிழ் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழ்க்கோலெழுத்துக்கள் – “மலையாண்மா”


பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் பல நூற்றாண்டுகள் கொடி கட்டிப்பறந்த வட்டெழுத்துக்கள் நாள்பட நாள்பட அவை ஒழுங்கு முறையில் எழுதப்படாமல் உருமாற்றங்களைப்பெற்று தமிழ் வட்டெழுத்து ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. இவ்வெழுத்து முறையைத்தான் திருவாங்கூர் போன்ற கேரளப் பகுதிகளில் “மலையாண்மா” என்றும் “கோலெழுத்து” என்றும் அழைக்கலாயினர். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் வட்டெழுத்து குறையத்தொடங்கியது. ஆனால் சேர நாட்டில் கி.பி. 1663 வரை நிலைத்திருந்தது என திரு. டி.ஏ. கோபிநாதராவ் கூறுகிறார்.

வட்டெழுத்து வீழ்ச்சசி


பாண்டிய நாட்டில் மிகச் செல்வாக்குடன் ஓங்கி வளர்ந்த பாண்டிய நாட்டை வென்ற சோழர்கள் தமிழ் வட்டெழுத்துக்களை ஆதரிக்கவில்லை. முதலாம் பராந்தகச்சோழன் முதலாம் இராசராசன் காலம் வரையாண்ட சோழர்கள் வட்டெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து பாண்டியர் பகுதிகளில் மறைந்துவிட்டது.

தமிழ்க் கிரந்தம் உதயம்


தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்தாண்ட சோழர்கள் காலத்தில் தமிழ் வட்டெழுத்து மங்கி கிரந்தத் தமிழ் மேலோங்கியது. பல்லவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட “பிராமிலிபி”யின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டி வளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெற்றது. சோழ மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. வட்டெழுத்துக்கள் மறைந்து கிரந்தத் தமிழ் தலை தூக்கியது.

தமிழ் இலக்கியங்கள்


“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்” எனப் புகழப்படும் தமிழ் உலகில் பல விலக்கியங்கள் தற்பொழுது தமிழகத்தில் தமிழ் பற்றும் புத்துணர்வும், மொழித் தூய்மையும், ஒழுங்குமுறை எழுத்து வடிவமைப்பும் அமையக் காரணங்களாக அமைகின்றது. இலக்கியங்கள் அனைத்துமே பெரும்பாலும் 1. முதற்பொருள், 2. கருப்பொருள், 3. உரிப்பொருள், என வகைப்படுதப்பட்டுள்ளன.

நம் தமிழ்மொழி இலக்கியவளம் பெற்ற மொழியாகும். இலக்கியங்களும் இலக்கணநூல்களும் பெருகி இருந்தமையால் தமிழ்மொழி திருந்திய மொழியாக, திருத்தம் செய்யப்பட்ட மொழியாக, ஒழுங்கு படுத்தப்பட்ட மொழியாகச் சிறப்புற்றது. இலக்கண மரபுகளைத் தகுத்து ஒழுங்குபடுத்தி “எழுத்து”, “சொல்”, “பொருள்” என்ற மூன்று தலைப்புக்கள் ஒலியைக்குறிக்கும் குறில், நெடில், ஆய்தம், இகரம், உகரம் போன்ற அனைத்துத் தமிழ் இலக்கண நெறிகளை நாம் அறிவோம்.

தமிழ் மொழியின் நான்கு நிலைகள்


1. பண்டைத் தமிழ் நிலை
2. காப்பியக்காலத் தமிழ் நிலை
3. இடைக்காலத் தமிழ் நிலை
4. தற்காலத் தமிழ் நிலை

என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள்,

பண்டையத் தமிழை அறியத் தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் உதவுகின்றன.

இடைக்காலத் தமிழை அறியத் தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி போன்ற இலக்கியங்கள் உதவுகின்றன.

தற்காலத் தமிழ்நிலையை, நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் மற்றும் பேச்சு வழக்குத் தமிழ் கொண்டும் தெரியமுடிகிறது.

ஒலியாகத் திரிந்து, சித்திரமாய் மாறி, பலமொழிகளுடன் இணைந்து உருக்கள் பலப், பல எடுத்து, காலம் பல கடந்து, கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச் சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக் காகிதத்தில் வீரநடை போடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த் தமிழ்.

என்றும், மழலையாய், குன்றாச் சிறப்புடன் தேன் சுவையொத்த, தமிழாம் கன்னியை முன்னோன் தன் கருவினில் சுமந்து, மகவாய் ஈன்று, மழலையாய் வளர்த்து, குமரியாய்ப் போற்றிக்காத்து நம்மிடம் விட்டுச் சென்றான். அன்னவள் விரிந்த கூந்தலை வாரிப் பின்னலிட்டு, மலர் வைத்து அன்புடன் அழகு பார்த்தல் நம் கடமையல்லவா? அழகு பார்க்க எவரும் துணியாதது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது.

ஃ – அக் என்னும் ஆயுத எழுத்து

அகரக்குறிலொலி துவக்கத்திலெழுப்ப
இக்கென மெய்யொலி இறுதியில் முடிக்க
அக்கென எழும்புமாயுத ஒலியை
மும்முற்றுப்புள்ளிகளெங்கனம் ஒலிக்கும்?
ஒலியே! இல்லா பிற ஒலி திருடும்
அவல நிலையைப் போக்கலாமெண்ணி

மும் முற்றுப் புள்ளியை நீக்கலும் சரியே!








தமிழ் மட்டுமே சிறந்த மொழி

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிக்க தொன்மை சார்ந்தவை என்ற கருத்து தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.

குறிப்பாக தமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும் முச்சங்க வரலாறு தமிழ் இலக்கியக்களத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. கடல் கொண்ட தென்மதுரையில் இருந்த முதற்சங்கம் 4400 ஆண்டுகள் செயல்பட்டதாகவும், கபாடபுரத்தில் இருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகள் இருந்ததாகவும், மதுரையில் இருந்த முன்றாம் சங்கம் 1850 ஆண்டுகள் இருந்துச் செயல்பட்டதாகவும் இறையனார் களவியல் உரை கருத்துரைக்கின்றது. இந்நூலின் கருத்தின்படி முச்சங்கங்கங்களின் மொத்த செயல்பாட்டுக் காலம் 9950 ஆண்டுகள் என்பது தெரியவருகிறது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகள் சங்ககாலமாகக் கொள்ளப்படவேண்டிய நிலை இதன்வழி ஏற்படுகிறது. அறிஞர்கள் கருதுகிற கடைச்சங்க காலமான கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாக பத்து நூறாண்டுகள் சங்கங்கள் இருந்துள்ளன என்ற முடிவிற்கு இதன் வழியாக வரஇயலும். எனவே சங்க இலக்கியத்தின் காலம் என்பது சுமார் கி. மு. ஏழாம் நூற்றாண்டளவில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளலாம். இந்த எல்லை கற்பனை கலந்தது என்று கருதுவாரும் உண்டு. இருப்பினும் இந்நூற்றாண்டளவையே நிலை நிறுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பெற்று வருகின்றன என்று அறியும்போது இக்கருத்தின் உண்மை வலுப்பெறுகிறது.

சங்கங்கள் இருந்தமைக்கும், அவை பழமை வாய்ந்தவை என்பதற்கும் உரிய பல இலக்கியக் குறிப்புகள் சங்கப்பாடல்களிலேயே கிடைக்கின்றன.

"ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழியப் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்தோய் ( புறநானூறு.2)

என்ற பாவடிகள் சேரமன்னனான பெருஞ்சோற்றுஉதியன் சேரலாதனைப் பெருமைப் படுத்த முடிநாகராயர் என்ற புலவரால் பாடப்பட்டதாகும். இவ்வடிகளில் பாண்டவர்கள் ஐவர், கௌரவர்கள் நூற்றுவர் ஆகியோருக்குப் பாரதப்போரின்போது பெருஞ்சோற்றினை மேற்கண்ட அரசன் வழங்கினான் என்று குறிப்பிடப்படுகிறது. இதன்முலம் பாரதம் நிகழ்ந்த காலத்தோடு சங்க இலக்கிய காலம் ஒன்று படுவது தெரியவருகிறது.

இதுபோன்று பல இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை எடுத்தியம்பினாலும், சான்றுகளைத் தரும் இலக்கியங்களின் காலம் என்பது ஐயத்திற்கு இடமளிப்பதால் இவை தரும் சான்றுகளை துணைச் சான்றுகளாகவே வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் எழுத்துவடிவ இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் வரி வடிவம் என்பது பன்னெடுங்காலமாக பல்வகை மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ந்து வந்திருப்பதால் இவற்றினைக் கொண்டு பண்டைக்கால வரலாற்றினை உறுதி செய்ய முடிவதில்லை. அதனோடு பண்டைய வரி வடிவத்தையும் உணரமுடியாமல் போய்விடுகின்றது.

இக்குறை நீங்கி உண்மை உணர, உணர்த்தப்பட குகைக்கல்வெட்டுக்கள், நடுகற்கள், பழைய கால நாணயங்கள், கடல் அகழ்வாய்வுகள், அகழ்வாய்வுகள் போன்றன தரும் எழுத்துவடிவச் சான்றுகளைக் கொண்டு தமிழின் தொன்மையை ஆராய அறிஞர்கள் முயல்கின்றனர். இவற்றின் உண்மைத்தன்மை மாறாத நிலைப்புத் தன்மை கொண்டவை என்பதனால் இவை முதன்மைச் சான்றுகளாகக் கொள்ளப்படுகின்றன.

குகைக்கல்வெட்டுக்கள்

தமிழ்நாட்டில் உள்ள தொன்மைவாய்ந்த குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களில் இருந்துக் கிடைக்கும் எழுத்துவடிவங்களை ஆராய்ந்து அவற்றின் வழியாக தமிழின் தொன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஐராவதம் மகாதேவன் தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள பண்டைய கால குகைக்கல்வெட்டுக்கள் முன்றினை முன்வைக்கின்றார்.

"குகைக்கல்வெட்டுக்களில் மிகவும் முக்கியமானவை மூன்று. மாங்குளத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் (கி. மு. இரண்டாம் நூற்றாண்டு), ஜம்பையில் அதியன் நெடுமான் அஞ்சியும்(கி. பி. முதல் நூற்றாண்டு), புகழுரில் சேரல் இரும்பொறையும் (கி. பி. இரண்டாம் நூற்றாண்டு) வெட்டி வைத்த கல்வெட்டுக்களாகும். இவை சங்ககாலத்தைச் சார்ந்தவை என்று உறுதியாகக் கூறலாம் என்ற அவரின் கருத்து தமிழ்ச்சங்க காலத்தின் கால எல்லையை உறுதிப் படுத்தும் ஆவணமாகும்.

மயிலை சீனி. வேங்கடசாமி ஏறக்குறைய இருபத்தைந்து குகைக் கல்வெட்டுக்களை தமிழின் தொன்மைக்கு முன்வைக்கின்றார். மீனாட்சிபுரம் கல்வெட்டு, திருவாதவூர் கல்வெட்டு, கீழவளவு, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, சித்தன்னவாசல், கருங்காலக்குடி, மருகல்தலை, அழகர்மலை, வரிச்சியூர், திருப்பரங்குன்றம்,முத்துப்பட்டி, ஆனைமலை, புகழுர், திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, மாமண்டுர், அரசலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்றம், கழிஞ்சமலை, ஐயர்மலை, சங்கரமலை, மாலகொண்டாக் கல்வெட்டு போன்ற கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகள், மற்றும் எழுத்துவடிவங்கள் போன்றனவற்றைக் கொண்டுத் தமிழின் தொன்மையை மயிலை சீனி . வேங்கடசாமி நிறுவுகின்றார். (மயிலை சீனி. வேங்கடசாமி, சங்ககாலத் தமிழக வரலாறு பக் 4565) இவற்றை அவர் அசோகப் பேரரசர் காலத்திற்கு முன்னது என்றும் உறுதி செய்கின்றார். மேலும் இக்கல்வெட்டுக்களில் காணலாகும் எழுத்து வடிவங்கள் கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக வடிக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இருந்து வேறுபட்டன என்பதையும் அவர் உறுதி செய்கின்றார். இதன் காரணமாக முத்த கல்வெட்டுக்களாக இவை உறுதி செய்யப்படுகின்றன. இக்கல்வெட்டுக்களின் வாயிலாக சங்க காலத்தைய ஊர்ப்பெயர்கள், வணிகக் குழுக்கள், அரசர்கள், மக்கள் பெயர்கள் போன்றன அறியப் பெறுகின்றன. இவற்றின் வாயிலாக சங்க இலக்கிய மரபுகளுடன் இவை ஒத்துப்போவதால் இவை சங்கத்தின் காலத்தை முடிவு செய்ய உதவியுள்ளன என்பது குறிக்கத்தக்கது.

நாணயங்கள்

தொன்மை காலத்து நாணயங்களில் காணப்படும், எழுத்து, உருவ அமைப்புகள் கொண்டும் தமிழின் இருப்பை, தொன்மைக்காலத்தது என்று உணர்த்தமுடிகின்றது. நடன. காசிநாதனின் `தமிழர் காசுஇயல்' என்ற நூல் சங்ககாலம் முதல் தமிழகத்தின் நாணய வளர்ச்சியை எடுத்தியம்புவதாக உள்ளது.

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள அழகன் குளம் மற்றும் பூம்புகார் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்ற கடலாய்வுகள் வழியாகக் கண்டெடுக்கப் பெற்ற நாணயங்கள் தமிழின் தொன்மையைக் காட்டும் மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

"பூம்புகாரக் காசில் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன் குளக் காசுகளில் பெரியதாக உள்ள காசில் முன்பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும் பின்பக்கம் மீன் உருவம் போன்றும் உள்ளன.(நடன. காசிநாதன், தமிழர் காசுஇயல்.. 21) என்ற அவரின் கருத்து இதனை மெய்ப்பிப்பதாக உள்ளது.

இவை தவிர பல வெளிநாட்டுக் நாட்டுக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாணிய நாட்டின் காசுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்து வருகின்றன. இவற்றின் கால அளவும் தமிழின் தொன்மையை அறிவிக்க உதவுகின்றன. `இய்யல் என்னும் ஊர் சேர நாட்டின் பண்டைத் துறைமுகங்களாகியத் தொண்டி மற்றும் முசிறி ஆகியவைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இய்யலில் கிடைத்துள்ள காசுகளில் நான்கு காசுகள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ரோமானிய நாட்டில் நிலவிய ` ரிபப்ளிகன்' காலத்தில் வெளியிடப்பட்டவை. அவை மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனாலும் கி. மு. 123 ல் இருந்து கி. மு. 86 ஐச் சார்ந்தது என்பது தெளிவாகும் என்று டாக்டர் பரமேஸ்வரி லால் குப்தா தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள், மேலது) இக்கருத்தின் முலம் தமிழர்களின் வாணிகப் பெருமை ரோமாபுரி வரை பரவியிருந்தமை தெரியவருகிறது. இவற்றின் முலமாகவும் தமிழின் காலத்தை நிர்ணயித்துக் கொள்ள முடிகின்றது.

ரோமானியத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த பிளைனி (கி.பி. 70), பெரிபுளுஸ் (கி.பி. 80), தாலமி (கி.பி. 120)ஆகியோர் தம் குறிப்புகளும் தமிழகத்தில் முவேந்தர் ஆட்சி நடைபெற்றதையும், வணிகம் சிறப்புற்றிருந்ததையும் குறிக்கின்றன. (விரிவிற்கு : மா. கந்தசாமி, தமிழகத் தொன்மையும் சிறப்பும், குமரன் பதிப்பகம் , சென்னை)

இவ்வாறு நாணயங்கள் வழியாகவும் தமிழின் தொன்மையை நிறுவிக் கொள்ள முடிகின்றது.

மேற்காட்டியவற்றின் வழியாக சங்க காலம் என்பதன் முடிவுப் பகுதியை உறுதி செய்து கொள்ளமுடிகின்றது. அதாவது கி. பி. முன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதான வாழ்வினைச் சங்கத் தமிழ் மக்கள் பெற்றிருந்தனர் என்பதே அந்த முடிவாகும். அக்காலத்திலேயே நயத்தக்க நாகரீகம் மிக்க உயர்குடியாக தமிழ்மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கு அவர்களின் சங்க இலக்கியங்கள் சான்றுபயக்கின்றன.

இந்தக் காலத்திற்கும் முன்னதாக தமிழன் வாழ்ந்திருக்கிறான் என்பதாக தற்போதைய ஆய்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற பண்டைய நாகரீகக் களத்தில் வாழ்ந்த குடி தமிழ்க்குடி என்பதே தற்போதைய ஆய்வுகளின் முடிவாகும். இப்பகுதிகளில் காணக்கிடைக்கும் வரிவடிவங்கள் தமிழின் தொன்மை வடிவங்கள் என்பதைப் பின்லாந்து அறிஞர் `பர்கோலா' நிறுவிவருகிறார். சிந்து சமவெளி நாகரீகம் எனப்படும் இந்த நாகரீகத்தின் முலமே திராவிடம் என்ற கருத்தினை உலக அளவில் உறுதி செய்யும் ஆய்வுகள் தற்போது எழத்தொடங்கிவிட்டன.

ஆரியர்கள், திராவிடர்கள் வடமொழி, தென்மொழி என்ற இருஎல்லைகளில் ஆரியர்களுக்கு முந்தையவர்களாகத் திராவிடர்கள் சிந்துசமவெளியில் வாழ்ந்தனர் என்ற கருத்தினுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக இவ்வாய்வுகள் தற்போது வலிமை பெற்று வருகின்றன. அங்குக் கிடைத்துள்ள ஆபரணங்கள், கருவிகள், மண்பாண்டங்கள் போன்றவற்றில் உள்ள எழுத்து வடிவங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க கிடைத்திருக்கும் சான்றுகளைக் கொண்டு அவற்றின் வழியாகப் பெறப்படும் வாழ்முறை, நாகரீகம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் திராவிட இனத்தை முன்னைப் பழமைக்கும் முத்த பழமையாக காட்டி நிற்பதே இவ்வாய்வுகளின் நோக்கமாகும்.

இந்திய அரசின் செம்மொழி நிறுவனமும் தமிழின் தொன்மையை ஒத்துக் கொள்கிறது. அது எவ்வளவு காலம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. செம்மொழி நிறுவனம் தமிழின் தொன்மை என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறித்துத் தன்னிறைவை அடைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கால மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்கலாம் என்ற கருத்துரு ஏற்கப்பட்டிருப்பினும் தமிழின் தொன்மை அதனைத் தாண்டி மிகவும் முந்தையது என்பதை நிறுவ தமிழ்த் தொன்மை பற்றிய ஆய்வுகள் உதவும் என்பதில் ஐயமில்லை.

தமிழின் தொன்மை

உலகில் முதல், முதல் மக்கள் தோன்றிய நாடு தமிழகமும், அதனையடுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காவிரிப்பூம்பட்டிணத்தில் நிலத்து நின்று வாழும் தமிழ் மக்களை

"பதியெழ அறியாப் பழங்குடியினர்" என இளங்கோவடிகள் கூறுகிறார்,

இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்

"படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்"

எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர்"

என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய

காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத்

தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும்.

இத்தையக மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை,

ஏனெனில் அது ஓரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை.

எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும்

காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டிடமும், சிற்பமும்,

கல்வெட்டும், புதை பொருட்களும் ஓருவாறு தமிழ் மொழியின் தொன்மையை

உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலகின் முதல் மொழி" எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் "இலத்தின்", "கீரிக்" மொழிகளுக்கு முந்திய மொழி" எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாகவிருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரீகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி.யு.போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர் வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாரட்டப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாரட்டைப் பெற்ற ஓரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப் பெற்றுவந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பறி ஆண்ட செய்தியையும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும், கல்வெட்டுக்களாலும்

அறியப்படுகின்ற உண்மைகளாகும். இதனால் தமிழ் மொழியானது

அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது.

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆஅண்டுகளூக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே

தமிழில் "நற்றிணை" என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில்,

தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக்

கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.

அப் பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.

அரிசி "ரைஸ்" எனவும், மயில் தோகை "டோ கை" எனவும், சந்தனம் "சாண்டல்" எனவும், தேக்கு "டீக்கு", எனவும் கட்டுமரம் "கட்டமாரன்" எனவும் , இஞ்சி "ஜிஞ்சர்" எனவும், ஓலை "ஒல்லா" எனவும் கயிறு "காயர்" எனவும் ஆயின. காலப்போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் "தொல்காப்பியம்" ஓன்றே.

அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கின்றன.

இவ்வுண்மையை "தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாகப் நம்பப் பெறுகிற நூல்களில்

"அகத்தியம்" எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு

முற்பட்டது என்று கூறுவோறும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள்

புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும்,

இது நடந்த காலம் 3000-ம், 5000-ம், 9000-ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும்

அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.

இதைக் கொண்டு ஆராய்வோம்..

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?? அதற்கு முன்னே உரைநடை தோன்றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்??

அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதெனும் கூற வேண்டுமானல் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.

மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே